Wednesday, 17 August 2016

476. Turning the cow's milk into medicated oil

Verse 476
கேளப்பா பானையிலே பசும்பால்விட்டு
கிருபையுடன் தலைவாழைக் குருத்து வாங்கி
வாளப்பா குருத்தினால் வேடுகட்டி
மைந்தனே அதின்மேலே கெந்திபோட்டு
ஆளப்பா அடுப்பேற்றி எரிக்கும்போது
ஆதியென்ற கெந்தியது தைலமாகும்
கேளப்பா இல்லாத தைலந்தன்னை
கூர்மையுடன் பீங்கானில் வாங்கிக் கேளே

Translation:
Listen son, adding the cow’s milk to the pot
With mercy, receiving the young stalk of plaintain tree
Covering the top with the stalk
Son, adding the gendhi over it
When burnt by kindling the stove
The origin, the gendhi will become a medicated oil
Listen son, the medicated oil that is not present
Collect it carefully in porcelain.

Commentary:
This verse can be interpreted in two ways, the alchemical way and the philosophical way.  “pasum paal” generally means cow’s milk,  Here it means the essence, the prana.  Siddhas recommend a method called “madai maattral” or changing the course.  This generally means the semen that is flowing down is turned upwards and made beneficial.  This can be understood as follows:
The energy from the food we consume is used to provide the impetus for various physical process.  A part of it is turned into the saptha dhatu or seven essential raw materials. They are rasa or plasma, raktha- blood, mamsa- muscle, meda- fat, asthi-bone, majja- bone marrow and sukla- reproductive fluid.  Starting from rasa one leads to the next and the energy so transformed is stored in the body in the semen or reproductive fluid.  This energy is generally wasted by humans.  Siddhas prescribe a method by which this energy can be reclaimed and used for spiritual ascendence.  Thus the cow’s milk mentioned in this verse may mean the reproductive fluid also.  This fluid, through this process loses its watery state and become thicker in consistence.  Agatthiyar may be referring to this as thailam. 

  .  “thalai vaazhai kurutthu” generally means the stalk of the young plaintain tree.  Here it means the sushumna nadi.  The gendhi, as usual, means the muladhara.  Thus he principle represented by the muladhara will become thailam or medicated oil.  In the next line Agatthiyar gives a clue so that we do not make wrong assumptions.  He says “the medicated oil that is not present”.  Thus, it is not that the muladhara will melt and become a liquid.  We should remember that the muladhara chakra is in the subtle body.  It is not a physical entity.  Turning it into a thailam means turning the principles represented by muladhara into beneficial entities.  Collecting them in the porcelain means collecting them at the vishuddhi.

இப்பாடலுக்கு ரசவாத நோக்கிலும் தத்துவ நோக்கிலும் பொருள் கூறலாம்.  பசும்பால் என்றால் பசுவின் பால் என்றும் ரசம் என்றும் பொருள்படும்.  ஒன்றன் பாலை எடுப்பது என்பது அதைப் பிழிந்து அதன் ரசத்தை எடுப்பது என்று பொருள்தரும்.  இங்கு பால் என்பது வேறொரு தத்துவத்தையும் குறிக்கலாம். 
சித்த யோகத்தில் மடை மாற்றல் என்ற ஒரு வழிமுறை உள்ளது.  நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தி உடலில் நடைபெறும் வேலைகளின் செயல்பாட்டுக்கு உதவுகிறது.  அந்த சக்தியின் ஒரு பகுதி உடலில் சப்த தாதுக்கள் எனப்படும் ஏழு பகுதிகளாக மாற்றபடுகிறது. அந்த தாதுக்கள் ரசம், ரத்தம், மாமிசம், மேத்ஸ் அல்லது கொழுப்பு, அஸ்தி அல்லது எலும்பு, மஜ்ஜை மற்றும் சுக்கிலமாகும்.  இந்த தாதுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகிறது.  உதாரணமாக மாமிசம் நுண்மையடைந்தால் கொழுப்பாகிறது.  இவ்வாறு சக்தி முடிவில் சுக்கிலம் அல்லது சுரோணிதம் எனப்படும் பிறப்பை ஏற்படுத்தும் நீரில் சேர்த்து வைக்கப்படுகிறது.  இந்த சக்தியை இதிலிருந்து பெற்று ஆன்மீகப் பயணத்துக்குப் பயன்படுத்தும் முறையே மடைமாற்றல்.  இவ்வாறு இப்பாடலில் பசும்பால் என்பது இந்த திரவத்தையும் குறிக்கலாம். 


தலைவாழைக்குருத்து என்பது வாழை மரத்தின் நடுவில் இருக்கும் இளம் தண்டைக் குறிக்கும்.  இங்கே அது சுழுமுனை நாடியைக் குறிக்கிறது.  இந்த குருத்தினால் பசும்பாலை வேடு கட்டி, அதனுடன் கெந்தி எனப்படும் மூலாதார சக்கரம் குறிக்கும் தத்துவங்களைச் சேர்த்து குண்டலினி என்னும் அடுப்பை ஏற்றி எரிக்க வேண்டும்.  அவ்வாறு செய்தால் அது தைலமாகும் என்கிறார் அகத்தியர்.  இந்த தைலம் என்பதை நாம் தவறாக எண்ணக்கூடாது என்பது அவர் “இல்லாத தைலமத்தை” என்கிறார்.  இதனால் உண்மையில் இங்கு தைலம் ஏதும் தோன்றுவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  இங்குள்ள தத்துவங்கள் இவ்வாறு பயனுள்ள வஸ்துவாக மாற்றப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது.  இந்த தைலத்தை பீங்கானில் கவனமாக வாங்க வேண்டும் என்கிறார். பீங்கான் என்பது பொதுவாக விசுத்தி சக்கரத்தைக் குறிக்கும்.

Tuesday, 16 August 2016

475. Gendhaka Thailam

Verse 475
பண்ணப்பா கவசமது நன்றாய் செய்து
பாலகனே புடம்போட பற்பமாகும்
என்னப்பா வென்று சொல்லி இருந்துவிட்டால்
ஈடேற்ற மில்லையடா தன்னைப் பாரு
விண்ணப்பா அந்தமதில் தன்னைப் பாரு
மெய்யுருகக் காணுமடா அங்கத் தங்கந்
தன்னப்பா ரங்கமடா தங்கமாகுந்
தாயான கெந்தகத்தின் தைலங் கேளே

Translation:
Do the shielding well,
The young one!  Through slow burning it will become ash
If you remaining saying, “What?”
There is no recourse.  See the self
See the self at the terminus of the space (ajna)
It will be seen, with the body melting, the golden body
The self, the arena, will become gold,
Listen about the medicated oil of gendhakam (Sulphur/muladhara).

Commentary:
During vaasi yoga the vaalai or the combination of prana, breath, mind and consciousness are raised to each of the cakras, starting with the muladhara.  This process burns the principles that the chakra represents.  These principles merge at the ajna and appear as a multicolored entity, each principle of the element that the chakra represents having an individual color.  Siddhas call this as pancha varna or five/multicolored form.  These principles bring about the universe with distinctions.  So when the yogin ties the energy in the chakra and burns it slowly these principles become ash.  This is the only way to transcend these principles. When the yogin reaches the terminus of space, ajna, only the soul or consciousness remains.  The elements that cause the material body merge and the soul is seen with a golden body. 

Gold is considered a precious metal because it does not undergo chemical transformation easily.  It remains in its elemental state without combining with other elements.  It does not undergo chemical reactions easily.  The body at ajna is called golden because it represents the soul in its pure state, its original state, without getting influenced by the distinguishing principles. The arena is the ajna.  The medicated oil of gendhakam is the process of melting the principles represented by muladhara.

வாசியோகத்தின்போது வாலை எனப்படும் பிராணன், மூச்சு, மனம் மற்றும் உணர்வு ஆகியவற்றின் கூட்டு மூலாதாரத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு சக்கரத்தின் ஊடேயும் ஏற்றப்படுகிறது.  இந்த வழிமுறை, ஒவ்வொரு சக்கரமும் குறிக்கும் தத்துவங்களை எரிக்கிறது.  இதையே அகத்தியர் புடம் போட்டு பஸ்மமாக்குதல் என்கிறார்.  இந்த தத்துவங்கள் அனைத்தும் ஒன்றாகி ஆக்னையில் தென்படுகின்றன.  இதை சித்தர்கள் பஞ்ச வர்ணம் அல்லது இந்திரசாலம் என்கின்றனர். இந்த தத்துவங்களே வேறுபாடுகள் உள்ள பிரபஞ்சமாகத் தென்படுகின்றன.  அவை அனைத்தும் ஆக்னையில் ஒன்றாகி ஆத்மா பொன்னிற மேனியுடன் காணப்படுகிறது.


பொன்னை விசேஷமான உலோகமாகக் கருதுவதற்குக் காரணம் அது பிற உலோகங்களுடன் எளிதில் கலப்பதில்லை, வேதியல் மாற்றத்துக்கு உட்படுவதில்லை.  தனது தனித்தன்மையுடனேயே காணப்படுகிறது.  ஆத்மா தங்கமாகக் காணப்படுவது என்று கூறுவது அது தனது தனிப்பட்ட நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.  இப்பாடலில் அரங்கம் என்று குறிப்பிடப்படுவது ஆக்ஞை.  கெந்தகத்தின் தைலம் என்பது மூலாதாரத்தை உருக்குவதைக் குறிக்கிறது.

Monday, 15 August 2016

474. copper bhasma

Verse 474
தாமிர பற்பம்
பாரப்பா இன்னமொரு கருவைக்கேளு
பதிவான பூரமடா கற்பூரந்தான்
நேரப்பா கற்பூரம் அதனோடோக்க
நிசமான கெந்தகமுங் கூட்டிச் சேர்த்து
காரப்பா கல்வமத்தில் அரைக்கும்போது
கசிந்துமிக சிவமாகுஞ் சிவத்திற் கேளு
சாரப்பா அரிதாரம் வீரஞ் சேர்த்து
தானரைத்து துட்டதற்கு கவசம்பண்ணே

Translation:
Copper bhasma
See son, hear about another essence
The pooram, karpooram
The karpooram equivalent to that
Add gendhakam (Sulphur) to it
While grinding it in the mortar
It will soften and become sivam,  listen about sivam
Add aridhaaram and veeram to it
Grind it and perform kavacham.

Commentary:
The pooram mentioned here is prapancha prana sakti.  Its equivalence is the pranasakthi in the body.  These two are joined together.  Kendhagam (Sulphur) stands for gandham or fragrance.  This represents the earth principle and the muladhara cakra.  Thus the prapancha prana sakthi and the prana sakti in the body are joined together at the muladhara.  Grinding them together in kalvam or mortar means mixing together with consciousness spanning the muladhara and ajna.  Ajna is called kal kottam or stone fort.  Thus, kalvam represents the ajna.  Sivam adds strength to this idea as it represents the akara state.  The aridharam, as we saw before, are the chakras.  Veeram is sakti.  Performing kavacham means enclosing it and protecting it from dissipation at the chakras.
The word thamira parpam, is interesting.  Thaam ira means the limited self dying and becoming universal self.  Parpam or bhasma is frying or burning something so that it becomes an ash.  The limited self is burnt in the fire of kundalini through the method mentioned here and burnt into universal state.  The vibhuti that the Saivas adorn represents this process.  The metal, copper corresponds to the manipuraka cakra.  The soul’s jouney begins from this chakra.  Hence, in this respect also the term thamra bhasma means the soul’s journey.

பூரம் என்று இங்கு குறிப்பிடப்படுவது பிரபஞ்ச பிராண சக்தி. அதற்குச் சமமாக இருப்பது உடலில் உள்ள பிராண சக்தி. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றாகக் கூட்டப்பட வேண்டும்.  கெந்தகம் என்பது கெந்தம் அல்லது கந்தம் என்று பொருள்படுகிறது.  கந்தம் என்பது பூமி தத்துவத்தைக் குறிக்கிறது.  உடலில் அதன் இடம் மூலாதாரம்.  இவ்வாறு பிரபஞ்ச பிராண சக்தியும் உடலில் உள்ள பிராண சக்தியும் ஒன்றாகக் கூட்டப்பட்டு மூலாதாரத்தையும் ஆக்ஞையையும் உணர்வினால் சேர்க்கவேண்டும்.  கல்வம் என்பது கலுவம் என்று அரைக்கும் கருவியைக் குறிக்கும்.  அது கல் என்று பொருள்கொண்டு ஆக்ஞையையும் குறிக்கும்.  சித்தர்கள் ஆக்ஞையை கல்குகை என்கின்றனர்.  இவ்வாறு ஒன்றாக்கப்பட்ட சக்திகளும் உணர்வும் சிவமாகும், சிவநிலையை பரவுணர்வு நிலையை அடையும்.  அவற்றை அரிதாரம் எனப்படும் சக்கரங்களில் வீரம் எனப்படும் சக்தியாக எழுப்பி அவை வெளியேறிவிடாமல் கவசமிடவேண்டும் என்கிறார் அகத்தியர்.

தாமிர பற்பம் என்ற சொல் ஒரு சுவையான பொருளை அளிக்கிறது. தாம் எனப்படும் அளவுக்குட்பட்ட ஆத்மநிலை இறந்து, பஸ்மமாக்கப்பட்டு பரநிலையை அடையும் வழிமுறையை இப்பாடல் கூறுகிறது. பஸ்மம் எனப்படும் வழிமுறையில் ஒரு பொருள் வறுக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ வெள்ளையான சாம்பல் நிலையை அடைகிறது.  இங்கு எரிக்கப்படுவது அளவுக்குட்பட்டமை, எரிக்கும் தீ குண்டலினி அக்னி.

தாமிரம் என்னும் உலோகம் மணிபூரக சக்கரத்தைக் குறிப்பது.  இந்த சக்கரத்திளிருந்துதான் ஆத்மா தனது பயணத்தைத் தொடங்குகிறது.  இவ்வாறும் தாமிர பற்பம் என்பது நாம் மேலே கூறிய பொருளைத் தருகிறது.

Sunday, 14 August 2016

473. Cannot be described, should experience it


Verse 473
எண்ணை என்றால் நல்லெண்ணெய் விட்டு மைந்தா
இன்பமுடன் தானுருக்க ஈயமாகும்
பெண்ணை யொத்த தாரமடா ஈயமானார்
பொன்னான பொன் விளையும் புகழ்ந்து பாரு
கண்ணை என்ற அரிதார ஈயந்தன்னை
கருத்தினிலே யான் சொல்லவென்றால் மெத்த கஷ்டம்
என்னை வளர்த்தெடுத்த குருநாதன் சொன்னார்
என்மகனே நீயுமிந்தப் படிதான் பாரே

Translation:
Oil means the good oil, adding it son,
If it is melted with pleasure it will become eeyam (lead)
The wife (adhara) like a lady- became eeyam
Gold will occur, praise and see
The eye, the aridhaara eeyam
It is difficult to describe it
The gurunatha who nurtured me told me,
My son!  You also see it through this method

Commentary:
Nallenai means sesame oil,  It also means good oil.  We saw that en means number and so this is good number or the eight and two, akara ukara.  The fire of kundalini that rises by this process melts the principles in its path and turns them all into sakti, the creative power.  The lady here is vaalai.  The adhara became ee.  Golden body ensues.  The eye is the third eye at ajna.  Agatthiyar concludes this verse saying that it is difficult to describe the sakti and one has to experience it through this method that his Gurunatha, Murugan taught him.


நல்லெண்ணை என்றால் எள்ளெண்ணை என்று நல்ல எண் என்றும் பொருள்.  நல்ல எண் என்பது எட்டும் இரண்டும் அல்லது அகார உகாரங்கள்.  இந்த வழியில் எழுப்பிய குண்டலினி அக்னி தனது வழியில் உள்ள தத்துவங்களை உருக்கி அவற்றை ஈயம் அல்லது சக்தியாக மாற்றுகிறது.  இந்த அக்னி வாலைப் பெண் என்றும் இதனால் ஆதாரங்கள் ஈயம் அல்லது சக்தியாகின்றன என்றும் பொன் மேனி விளைகிறது என்றும் ஈயம் என்பது கண் எனப்படும் புலன்கடந்த உணர்வைக் குறிக்கிறது என்றும் காட்டும் அகத்தியர் இந்த சக்தியை விளக்குவது கடினம், அதை ஒருவர் தான் தனது குருநாதரிடம் அறிந்துகொண்டு உணர்ந்ததைப் போல உணரவேண்டும் என்றும் கூறுகிறார்.  அகத்தியரின் குருநாதர் முருகன் ஆவார்.

Thursday, 11 August 2016

472. Aridhaara lead

Verse 472
அரிதார ஈயம்

ஆமப்பா கனகமென்ற தங்கத்தாயை
அருமையுடன் காணுதற்கு அங்கங்கேளு
ஓமப்பா வீரமுடன் லிங்கங் கூட்டி
உண்மையுடன் கமலரசந் தன்னால் ஆட்டி
தாமப்பா தாரமதுக் கங்கி பூட்டி
சங்கையுடன் ரவிதனிலே காயப்போட்டு
நாமப்பா சொல்லுகிறோம் அயக்கரண்டி
நன்மையுடன் கவசமிட்டு எண்ணை குற்றே

Translation:

The lead paint

Yes son, to see the golden mother, the kanaka
Listen to the part that will help to see her lovingly,
Om son, add veeram and lingam with it
Grinding it with the rasa of lotus,
Locking the fire to the dhaaram (aadhaara)
Dry it carefully in ravi (sun-pingala)
(nama) We are saying the ladle of iron (ayam)
Adding the shield, pound the oil (number).

Commentary:
From this verse onwards Agatthiyar begins verses that sound like alchemy.  The title of this verse is aridhaara eeyam which means lead paint. It actually means aaru aadhaara or six adhara ee am- the sakthi that is stabilized in the body.  We have seen before that the seed letter ang draws the universal energy inside the body and am stabilizes it inside.  Thus the title means drawing the universal energy and stabilizing it in the six adhara. 

Now the verse:  The golden mother is Sakthi.  To see her the yogin has to join the omkara or the five elements with veeram, the sakthi and lingam the siva.  In other words, the omkara is joined with nadha and bindhu.  Veeram also represents the mind and the lingam or sign represents consciousness, the fundamental characteristic of a soul.  Veeram and lingam also refer to specific mantra that are not said explicitly here.  These are joined together with the amrit, the essence of the lotus.  This combination is burnt in the cakra with the fire of kundalini.  Dhaaram angi pooti means adorning the cloak to the wife, commonly.  This is then dried in the sun or  surya mandala which spans the region between the navel and the throat chakra.  Agatthiyar begins the next line as “naamappaa sollukirom” which means we are telling.  Naam also means nama.  They represent the muladhara and svadishtana.  They function as the shield for the soul.  The soul’s travel begins at manipuraka.  Ayam means iron.  It also means a and ya or the akara and yakara- the muladhara and ajna which represent akara and yakara.  “ennai kuttru” means pound to get the oil.  It also means pound the number.  The number here is eight and two or akara and ukara. 

இப்பகுதியிலிருந்து அகத்தியர் ரசவாதம் போலத் தோன்றும் பாடல்களால் தத்துவங்களை விளக்குகிறார்.  இப்பாடலின் தலைப்பு அரிதார ஈயம்.  அரிதாரம் என்பது ஆதாரம் என்பதன் இடத்தில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உள்ளது.  ஏனெனில் இப்பாடலில் அவர் ஆறு ஆதாரங்களின் செயல்பாட்டை விளக்குகிறார்.  ஈயம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்.  இ+அம் என்பதை உச்ச்சரிக்குபோது ஈயம் என்றாகிறது.  இ என்பது சித் கலா, உலகமாகப் பரிமளிக்கும் சக்தி.  அதை உடலில் பிரணனாக உணரலாம்.  இந்தப் பிராணனை உடலில் சமன்படுத்தி அதிகரிக்கச் செய்வது அம் என்ற பீஜ எழுத்து.  இவ்வாறு அரிதார ஈயம் என்பது ஆறு ஆதாரங்களில் பிரபஞ்ச பிராணசக்தியை ஈர்த்து சமன்படுத்துவது என்று பொருள் தருகிறது.

கனகத் தாய் என்பது சக்தி.  அவளைக் காண ஒரு யோகி ஓம்காரத்தை அல்லது பஞ்ச பூதங்களை வீரம் எனப்படும் சக்தியுடனும் லிங்கம் என்னும் சிவத்துடனும் சேர்க்கவேண்டும்.  அதாவது பஞ்ச பூதங்களை நாத விந்துக்களுடன் சேர்க்க வேண்டும்.  வீரம் என்பது மனம், லிங்கம் என்பது உணர்வு என்றும் பொருள் படும்.  இவை இரு மந்திரங்களையும் குறிக்கலாம்.  இவ்வாறு சேர்த்தவற்றை கமலரசம் கொண்டு ஆட்டவேண்டும்.  அதை சக்கரங்களில் அக்னியைக் கொண்டு எரிக்கவேண்டும்.  அதன் பிறகு அதை ரவி அல்லது சூரிய மண்டலத்தில் உலர்த்த வேண்டும்.

தாரம் அங்கி பூட்டி என்பது மனைவிக்கு அங்கி அணிவித்து என்ற பொருளைத் தருகிறது.  ஆனால் பொருள் அதுவல்ல. தாரம் என்பது ஆதாரம், அங்கி என்பது அக்னி.  ஆதாரங்களில் அக்னியை எழுப்பி என்று இதற்குப் பொருள்.


நாமப்பா சொல்லுகிறோம் என்று அடுத்த வரியைத் தொடங்குகிறார் அகத்தியர்.  இது நாங்கள் கூறுகிறோம் என்று பொருள் தந்தாலும் நாம் என்பது நம என்பதன் இடத்திலும் இடப்பட்டிருக்கலாம்.  இந்த இரு அட்சரங்களும் மூலாதாரத்தையும் சுவாதிஷ்டானத்தையும் குறிக்கின்றன.  ஆத்ம உணர்வின் பயணம் மணிபூரகத்திலிருந்து தொடங்குகிறது.  அயம் என்பது ஆத்மாவைக் குறிக்கும்.  அதற்குக் கீழ் உள்ள இந்த இரு சக்கரங்களும் அதற்குக் கவசங்களாக இருக்கின்றன.  அயம் என்பது அ மற்றும் யம் என்ற இரு எழுத்துக்களைக் குறிக்கும்போது மூலாதாரத்தையும் ஆக்ஞையையும் குறிக்கின்றன.  எண்ணைக் குற்று என்பது எண்ணெயை எடுக்கக் குற்று என்பதைப் போலத்தோன்றினாலும் இந்த இரு சக்கரங்களின் மூலம் உயருணர்வைப் பெறுவதை எட்டு இரண்டு என்ற எண்களின் ரசத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.  

Monday, 8 August 2016

471. Siva yoga muktha

Verse 471
ஆச்சப்பா சிவயோகி ஆவதென்றால்
அடங்கி நின்ற பஞ்சகர்த்தாள் அஞ்சு பேரை
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்டு
பெருமையினால் சிவயோக முத்தனாச்சு
மூச்சப்பா தானறிந்து தன்னைப் பார்த்து
முனையான சுழினையில் வாசி பூட்டி
காச்சப்பா அக்கினி கொண்டாறாதாரங்
கசடகலக் காச்சிவிடு கனகமாமே

Translation:
To become a siva yogi
The pancha kartha five who remained abiding
Knowing speech, see it.
That is (the state of) sivayoga muktha
Knowing the breath, seeing the self
Locking the vaasi in the tip, the ajna (suzhinai)
Boil/the six adhara with fire
Boil it so that the crud will be removed, it becomes gold.

Commentary:
Agatthiyar explains how to become a siva yogi.  The pancha kartha or the five actors are Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva.  Speech represents nadha.  When Agatthiyar says know the speech it means know its origin, nadha.  Knowing the breath means knowing the prana or the life force that rides with the breath.  This is the vaasi.  This is locked at ajna the tip.   The fire is the fire of kundalini.  This fire is raised through the six adhara.  When the energy moves through them the adhara are lighted up as if they are on fire.  The adhara represent different limitations.  Agatthiyar calls them as crud.  This crud is burned when the fire of kundalini passes through these centers.  Then the body becomes pure, like gold.


எவ்வாறு சிவயோகியாவது என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். பஞ்ச கர்த்தாக்கள் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் ஆகியவர்களைக் குறிக்கும்.  பேச்சு என்பது அதன் மூலமான நாதத்தைக் குறிக்கும்.  மூச்சை அறிந்து என்பது அந்த மூச்சை வாகனமாகக் கொண்டு பயணிக்கும் பிராணனைக் குறிக்கும்.  அதுவே வாசியாகும்.  இந்த வாசியை முனை அல்லது சுழினை எனப்படும் ஆக்ஞையில் பூட்ட வேண்டும்.  அக்னி என்பது குண்டலினி தீ.  அதனால் ஆறு ஆதாரங்களை எரிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஆறு ஆதாரங்களும் ஆறு உணர்வு நிலைகளைக் குறிக்கும்.  பல தத்துவங்களைக் குறிக்கும்.  இந்த தத்துவங்கள் ஏற்படுத்தும் அளவுக்குட்பட்டமையே மலங்கள் எனப்படுகின்றன.  இந்த களங்கம் எரியுமாறு குண்டலினித்தீயால் ஆதாரங்களை எரிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் உடல் பொன்னார் மேனியாகும் என்கிறார் அகத்தியர்.

Sunday, 7 August 2016

470. Siva yogam

Verse 470
அடுத்துமிக வாழ்வதற்கு மைந்தா கேளு
ஆதியந்த பூரணமாம் அண்டதேகி
விடுத்துமிக அதின் ரசத்தை வாங்கிக் கொண்டு
வேதாந்த சத்திசிவ பானமூட்டி
கடுத்து மிகப் போகாமல் கற்பூரஞ் சாற்றி
களங்கமில்லா ரவிதனிலே காய வைத்து
எடுத்துமிகப் பூரணமாய்க் கொண்டாயானால்
ஏகாந்த மான சிவ யோகியாச்சே

Translation:
Son, listen, to live associated so,
Going to the universe (andam) which is the origin and terminus
Accepting its essence
Kindlining the drink of Vedanta Sakti Sivam
Adding camphor to prevent it from becoming intense
Drying it in the faultless ravi
If you consume it as poornam
It became the siva yogam.

Commentary:
In vaasi yogam the breath is raised to dvadasantha, the origin and the terminus of a life form.  The essence or universal life force is received from that state.  The drink of Vedanta sakti and sivam are nadha and bindu.  To this is added the state at ajna which appears as the smoke of camphor.  This is then stabilized in the body through the pingala nadi, the surya or ravi.  It is then received into the body as poornam.  Agatthiyar is describing what to do with this poornam so received.


வாசி யோகத்தில் வாலை எனப்படும் மூச்சு, பிராணன், மனம், உணர்வு என்றவற்றை துவாதசாந்தத்துக்கு ஏற்றவேண்டும்.  அதுவே ஒரு உயிர் தோன்றுமிடம், முடியுமிடம்.  அங்கிருந்து பிரபஞ்ச பிராண சக்தி அல்லது உயிர்சக்தியைப் பெற்று, வேதாந்த சக்தி சிவம் எனப்படும் நாத பிந்துக்களுடன் கூட்டி கற்பூரம் எனப்படும் ஆக்ஞைக்குக் கொண்டு சென்று ரவி எனப்படும் பிங்கல நாடியின் மூலம் உடலில் நிறுத்த வேண்டும்.  அவ்வாறு பெற்ற சக்தியே பூரணம் எனப்படும்.  இதை மேலும் என்ன செய்வது என்பதை அகத்தியர் அடுத்த பாடலில் கூறுகிறார்.